Wednesday 14 December 2016

தொழில்முனைவோர் குணங்கள் | Habits of Eunterprenuer

தொழில்முனைவோர் குணங்கள் | Habits of Eunterprenuer

சொந்தமாக தொழில் செய்து வாழ்வில் முன்னேற விரும்புகிறீர்களா? வாழ்த்துக்கள். நிச்சயம் உங்களால் முடியும். மிகப்பெரிய தொழிலதிபராகும் தகுதி உங்களிடம் இருக்கிறது. கூடவே சில விஷயங்களை கவனமாக நீங்கள் பின்பற்றினால் போதும். வெற்றி நிச்சயம்! சரி, அந்த சில விஷயங்கள் என்னென்ன?
முதலில் தாங்கள் ஒரு தொழிலை நிறுவி வெற்றி பெறச்செய்யும் சாதனையில் ஈடுபட்டிருக்கிறோம் என்ற எண்ணம் மனதின் அடித்தளத்தில் இருக்க வேண்டும். இது முதல் விஷயம் மட்டுமல்ல, முக்கியமான விஷயமும் கூட. இதன் பிறகுதான் மற்ற குணங்கள். அவை:





1. தொழில்தாகம்

தொழிலைத் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்ற தணியாத தாகம் வேண்டும்.

2. சிரித்த முகம்

நகல்வல்லர் அல்லரார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்(று) இருள்.
(திருக்குறள் 999)

அதாவது, பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு மிகப் பெரிய இந்த உலகம், ஒளியுள்ள பகற்காலத்திலும் இருளில் கிடப்பதாகும் என்கிறார் வள்ளுவர்.
எல்லாத் தொழிலிலும் பொதுமக்களுடன் நெருங்கிப்பழகும் அவசியம் ஏற்படும். ஆகவே, தொழில்முனைவோர் பொது மக்களிடம் சிரித்துப் பழகுகின்ற பழக்கத்தையும், குணத்தையும் பெற்றிருத்தல் வேண்டும். குறிப்பாக ஏற்கனவே தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் விரும்பிப் பழக வேண்டும்.


3. மனதில் உறுதி இருக்க வேண்டும்

முன் வைத்த காலை பின்வைக்காதே என்பதை மனதில் கொள்ள வண்டும். தொழிலின் தொடக்க காலத்தில் பல தடைகளை எதிர்கொள்ள நேரிடும். அச்சமயங்களில் மனம் தளராத உறுதி கொள்ள வேண்டும்.

4. முயன்றால் முடியும்

தொடங்கும் தொழில்முனைவோர் வெற்றி அளிக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். நம்பினார் கெடுவதில்லை. மனமுண்டானால் வழி உண்டாகும் போன்ற பழமொழிகளை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும். இந்த நான்கு விதிகளையும் கடைப் பிடித்து நடந்தால், வெற்றி நிச்சயம். ஆமாம், நீங்கள்தான் வெற்றி பெற்ற தொழில்முனைவோர்
Pure short Nose and long tail Cock
parrot beak and temper,tail male&hens
good quality Chicks Available,,,,,,,,,

Salem arun
PH;9514438445

Delivery available ALL OVER INDIA/ CHARGES APPLY...

வியாபாரத்துக்கு முன் அஸ்திவாரப் பணிகள்!

வியாபாரத்துக்கு முன் அஸ்திவாரப்பணிகள்!


எந்த ஒரு தொழிலிலுமே எடுத்த எடுப்பில் லாபம் பிய்த்துக்கொண்டு கொட்டுவதில்லை. வெளியில் இருந்து பார்த்தால் எல்லா தொழில்களும் லாபம் கொழிக்கும் வாய்ப்பாகவே தெரியும். இறங்கி வேலை செய்யும்போது, சில நடைமுறைச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். அது, தொழிலுக்கான ஆரம்பகட்ட வேலைகளில் இருந்தே தொடங்குகிறது.
அஸ்திவாரம் எடுக்கும்போது வெறும் மண் குவியல்களாகத்தான் தெரியும். கட்டி முடித்தபிறகு அதன் அழகுணர்ச்சியும், வெளிப்புற வடிவங்களும் மனதை ரம்மியமாக்கும். அதைப்போலத்தான் ஆரம்பகட்ட வேலைகளும். உருவத்தைத் தருவதற்கு ஆகும் நேரங்கள், வருமானமில்லா செலவுகள் என முக்கியமான சில அஸ்திவாரப் பணிகளைச் சரியாகத் திட்டமிட்டுவிட்டால் அதன்பின் தொழில் ஜொலிக்கத் துவங்கிவிடும். அஸ்திவாரத் திட்டமிடுதல்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
எந்தத் தொழிலை ஆரம்பிக்க உள்ளோமோ, அவற்றுக்கான தியரி கிளாஸ்தான் இப்போது நாம் பார்க்கப் போவது! ஏதேனும் ஒரு வழியில் உங்களுக்குப் பரிச்சயம் உள்ள தொழிலைத் தேர்ந்தெடுத்துவிட்டீர்கள். இதில்தான் ஆரம்பிக்கப் போகிறேன் என முடிவெடுத்த பிறகு செய்யவேண்டிய முதல் வேலை, அதைப்பற்றிய முழுத் தகவல்களையும் சர்வே செய்வது!
உதாரணமாக, விதவிதமான துணிகளை வைத்து விற்கும் ரெடிமேட் கார்மென்ட் ஷாப் துவங்கப் போவதாகக் கொள்வோம். ‘அந்தத் தொழில் எத்தனை சதவிகிதம் வருமானத்தைத் தரும்... அதற்கான வாய்ப்புகள் என்ன... வாடிக்கையாளர்கள் யார்... சுற்றுப்புறத்தில் இதுபோன்ற கடைகள் எங்கெங்கு உள்ளன... போட்டி யாளரின் விலை விவரங் கள்... தன் வாடிக்கை யாளர்களுக்கு கடை பற்றிய அறிமுகத்தை எப்படித் தருவது?’ என்று தெளிவான ஒரு பார்வை இருக்கவேண்டும்.
தொடங்கும் தொழில் மற்றும் அத்துறை சார்ந்த விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். இப்போதைய வாய்ப்புகள் எதிர் காலத்தில் எந்த மாதிரி யான மாற்றங்களுக்கு ஆளாகும்..? என்பதை எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.
தொழில் ஆரம்பிக்கும் பகுதியின் பூகோள அமைப்பு, அங்குள்ள மக்களின் வாங்கும் சக்தி என்ன... அவர்களின் சராசரி வருவாய் விகிதம் என்னவாக இருக்கிறது... வாடிக்கையாளர்களின் டேஸ்ட் பற்றிய புள்ளி விவரங்கள் சேகரிப்பது, தொழிலைத் திட்டமிட பயன்படும்.
அந்தத் தொழிலுக்கே உரிய சட்டப்படியான நடைமுறைகளை அறிந்து, அதற்கேற்ற இடமாக இருக்கிறதா என்பதையும் கவனித்துக்கொள்ள வேண்டும். ஒரு டிராவல்ஸ் ஆரம்பிப்பதாக இருந்தால், கார்களின் பர்மிட்டைப் பொறுத்தவரை ‘ஆல் இண்டியா பர்மிட்’, ‘ஸ்டேட் பர்மிட்’ என இருவகை உள்ளது. ஆல் இண்டியா பர்மிட் உள்ள வண்டிகளுக்கு பத்துவருடம் வரைதான் லைசென்ஸ். வருடம் முடிந்தவுடன் தானாகவே லைசென்ஸ் கேன்சலாகிவிடும். அதன்பிறகு சொந்த உபயோகத்துக்கு மட்டுமே பயன்படுத்தமுடியும். இந்த விவரங்களோடு இன்ஷூரன்ஸ், வருடத்துக்கான வரி எவ்வளவு, வெளிமாநிலங்களுக்குச் சென்றால் டேக்ஸ் என்ன என்பது முதற்கொண்டு தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
கடை என்றால் தேவையான இன்டீரியர் வேலைகளுக்கான செலவுகள், கால அவகாசம் இவற்றையும் கணக்கிடவேண்டும். வங்கியில் கடன் வாங்கி தொழில் செய்வதாக இருந்தால், ஆகும் இடைக்காலச் செலவுகள், நல்ல திறமையான ஊழியர்களைப் பணி அமர்த்துவது என குறைந்தபட்சம் ஒரு மாத காலம் ஆகும்.
அலுவலகம் என்றால் தேட ஆரம்பிக்கும்போதே தொழிலுக்கு பெயர் வைப்பது, சரக்குகளை வாங்குவது, எந்தப் பொருளை எங்கே வைத்தால் பயன்பாட்டுக்கு எளிதாக இருக்கும் என்ற விஷயங்களில் தெளிவு பெற்றுக்கொள்வது நல்லது. வாடிக்கையாளர்களுக்கு பார்க்கிங் ஏரியா ஒதுக்கமுடியுமா என்பதைக் கவனிக்கவேண்டும். தொலைபேசி இணைப்பை இந்தக் காலகட்டத்திலேயே வாங்கிவிடவேண்டும்.
அடுத்தபடியாக விசிட்டிங் கார்ட்! கடை துவங்கும் வேலை ஆரம்பித்த நாளிலிருந்தே தெரிந்தவர், வருவோர் போவோர் எல்லோருக்கும் இப்படி ஒரு வேலை நடந்துகொண்டு இருக்கிறது. இந்தத் தேதியில் கடை திறப்புவிழா என்று விளம்பரப்படுத்த ஆரம்பியுங்கள். இதுதான் உங்களது விளம்பர உத்தியில் பிரம்மாஸ்திரம். கடைச்சரக்கு பற்றிய விவரங்கள் அடங்கிய பட்டியலை பிட் நோட்டீஸாகக் கொடுத்து விளம்பரம் செய்யவேண்டும்.
இவை அனைத்துக்கும் தொழில் ஆரம்பிக்கும் முன்னரே செலவு செய்யவேண்டியிருக்கும். இதற்கெல்லாம் கையில் பணம் இருக்கவேண்டும். கடன் வாங்குதல் கூடாது.
எந்த அளவுக்கு வாடிக்கையாளர்களை உருவாக்கி நல்ல நட்புறவை வளர்த்துக்கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு வருமானத்துக்கான வழிகள் அரண்மனைக் கதவுகள் போலப் பெரிதாகத் திறக்கும்.
தொழில் பற்றிய விவரங்களை வைத்துக் கொண்டு, திட்ட அறிக்கையினைத் தயார் செய்துகொள்ள வேண்டும். அதாவது, இந்தத் தொழில் ஆரம்பித்தால் எவ்வளவு முதலீடு தேவைப்படும். செய்த முதலீட்டை எத்தனை மாதங்களில் எடுக்கமுடியும். மாதம் எவ்வளவு சம்பாதிக்கமுடியும்... நடைமுறை மூலதனம் போன்ற விவரங்கள் அடங்கியதே அது. இத்துடன் இதற்கான காலம் எவ்வளவு ஆகும் என்பதையும் கணக்கிடவேண்டும். அதில் முதலீட்டின் வட்டிவிகிதம் அடங்கும்.
திட்ட அறிக்கையை அடிப்படையாக வைத்து ஒரு பட்ஜெட் போடவேண்டும். அதில் ஒவ்வொரு செலவையும் திட்டமிட்டும், சிக்கனமாகவும் பில்வாங்கியும் கணக்கு எழுதிவைக்கவேண்டும்..
இந்தக் காலத்தில் உங்களது சொந்த வேலைகள் பாதிக்கப்படும். வருமானம் இல்லாமல் செலவுகள் ஆகும். போக்குவரத்துச் செலவுகள், புரோக்கர் கமிஷன்கள், தேடுவது கிடைக்கும்வரை ஆகும் விரயங்கள் என இதுவே ஒரு பெரும்தொகையாக இருக்கும். இதனைச் சமாளிக்கவும் பணம் கையிருப்பு இருக்க வேண்டும். இவற்றை முதலீட்டில் சேர்த்துக் கணக்கிடுவதா அல்லது செலவுகளாகச் சேர்த்துவிட்டு லாபத்தைக் குறைத்துக்கொள்வதா என்ற விவரமும் தெரிந்திருக்கவேண்டும். பொதுவாக, ஒரு திட்டம் துவங்கும் முன் ஆகும் செலவினங்களை முதலீடாகவே எடுத்துக்கொள்வார்கள்.
எல்லா தொழில்களும் லாபம் தரக்கூடியதே! அது தரும் லாப சதவிகிதத்தில்தான் மாறும். முதலீடு செய்து தங்க முட்டையை எடுப்பதும், தவிட்டு முட்டையைப் பெறுவதும் நம் கையில்தான் இருக்கிறது

மண் புழு உரம் தயாரிப்பு - Manpulu | iyarkai uram thayarippu


இன்றைய தேதியில் நாம் மிக அதிக பணத்தைச் செலவு செய்வது நம் உடல் ஆரோக்கியத்திற்குதான். இதுவரை இல்லாத பல நோய்கள் நம்மை தாக்கக் காரணம், செயற்கையான ரசாயன உரங்களைக் கொண்டு விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்களை நாம் பெருமளவில் உட்கொள்ள ஆரம்பித்ததுதான். செயற்கை உரங்களைக் கொண்டு விளைவிக்கப்படும் காய்கறிகளை ஒதுக்கிவிட்டு, இயற்கையான உரங்கள் மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு இப்போது மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இயற்கை உரங்களில் பல வகை உண்டு. அதில் ஒன்றுதான் மண் புழு உரம்.
ஒவ்வொருவர் வீட்டிலும் காய்கறிகள், பழங்கள், உணவு போன்ற மக்கும் கழிவுகள் நிறையவே கிடைக்கின்றன. தேவை இல்லாததால் தூக்கி எறியப்படும் இந்த கழிவுகளைக் கொண்டு மண் புழு உரம் தயாரிக்க பயன்படுத்தினால், நல்ல லாபம் பார்க்க முடியும். 'வெர்மி கம்போஸ்ட்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த மண் புழு உரம், நிலத்திற்கு மாசு ஏற்படாமல் தடுப்பதோடு, நம் உடலுக்கும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத காய்கறிகளை அதிக அளவில் விளைவிக்கவும் உதவுகிறது. மண் புழு உரம் தயாரிக்கும் தொழிலில் அனைவரும் இறங்கி ஜெயிக்க முடியும். ஆனால், அதற்கென இருக்கும் தயாரிப்பு முறையை மட்டும் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.

சந்தை வாய்ப்பு!
விவசாயத்திற்கும், தரிசுநில மேம்பாட்டிற்கும் மிகவும் பயன்படக்கூடியது இந்த மண் புழு உரம். வீடுகளில் செடி வளர்ப்பவர்களுக்கும், தோட்டம் அமைத்திருப்பவர் களுக்கும் இந்த மண் புழு உரம் அதிக நன்மை தருபவை. நஞ்சை நிலங்களில் பல விவசாயிகள் மண்புழு உரம் உபயோகிப்பதன் மூலம் தங்களது விளைச்சலை அபரிமிதமாகப் பெருக்கிக் காட்டியுள்ளனர். கோழி வளர்ப்பவர்கள் அதற்குத் தீனியாக மண் புழுக்களைப் போடுகிறார்கள். விலை உயர்ந்த மீன்குஞ்சுகளை வாங்கி வளர்த்தாலும் அதற்கு இரையாக மண் புழுக்களை உணவாகப் போடுகின்றனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வில், மண் புழு உரம் போட்டு பயிரிடப்பட்ட திராட்சைகள் நல்ல தரத்துடனும், அதிகளவில் விளைச்சலும் கொடுத்தது என தெரிய வந்துள்ளது. எனவே, இதுபோன்ற இயற்கை உரத்திற்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
இடம்!
இந்த பிஸினஸ் ஆரம்பிக்க குறைந்தபட்சம் 500 சதுர அடி இடம் தேவைப்படும். கிராமப்புறங்களில் ஆரம்பிக்க நினைப்பவர்கள் தங்களது தோட்டத்திலேயே மண் புழு உரத்தைத் தயாரிக்கலாம். மொட்டை மாடியில், மேல் சுவர் கெடாதபடி பிளாஸ்டிக் ஷீட் போட்டு, அதன் மீது இந்த மண் புழு உரத்தைத் தயாரிக்கலாம்.
மூலப் பொருட்கள்!
மாட்டுச் சாணம், கோழி இறகு, மீன் கழிவுகள், அழுகிய காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற மக்கும் தன்மையுடைய அனைத்துப் பொருட்களையும் பயன்படுத்தலாம்.
தயாரிப்பு முறை!
மாட்டுச் சாணம், மக்கக்கூடிய இலை தழைகள், சருகுகள் என எல்லாவற்றையும் ஈரப்பதம் கலந்த மண்ணில் போட்டு, மாட்டுச் சாணத்தை கரைத்துத் தெளிக்க வேண்டும். ஒரு மாதத்தில் அந்த மண்ணில் போட்ட அத்தனை பொருட்களும் மக்கிவிடும். இதன் பிறகு மேற்கொண்டு தண்ணீர் ஊற்றாமல் காற்றுப்படுகிற மாதிரி வைக்க வேண்டும். இதில் மண் புழுக்களை விட்டால் 40-50 நாட்களில் மண் புழு உரம் தயாராகிடும். இதன் பிறகு உரங்களைத் தனியாகவும், மண் புழுக்களைத் தனியாகவும் எடுத்து விற்பனை செய்யலாம்.
முதலீடு!
ஆண்டுக்கு 200 மெட்ரிக் டன் மண் புழு உரம் தயாரிக்க குறைந்த முதலீடே போதுமானது. செயல்பாட்டு மூலதனம், முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள் என மொத்தம் சுமார் 62,000 ரூபாய் வரை செலவாகும்.
இயந்திரங்கள்!
மிகப் பெரிய அளவிலான இயந்திரங்கள் கொண்டு செய்யப்படும் தயாரிப்பு அல்ல இது. பெரும்பாலும் நம் உடலுழைப்பைக் கொண்டே தயார் செய்யக்கூடியது. எனினும், பெரிய அளவில் செய்யும்போது வேலை சுலபமாக பவர் டிரைவன் சாஃப் கட்டர், எடை போடும் இயந்திரம், தண்ணீர் பாய்ச்சுவதற்கு குழாய் மற்றும் விவசாயம் சார்ந்த சில கருவிகள் இந்த தொழிலுக்குப் போதுமானவை. இந்த இயந்திரங்கள் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் தாராளமாகக் கிடைக்கிறது.
வேலையாட்கள்!
தனிப்பட்ட முறையில் பயிற்சி பெற்ற வேலையாட்கள் இதற்கு வேண்டும் என்று கிடையாது. விவசாய வேலைக்குப் போகும் ஆட்கள் போதும். கிராமப்புறங்கள் எனில் ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது. ஆண்டுக்கு 200 மெட்ரிக் டன் மண் புழு உரம் தயாரிக்க மொத்தம் ஐந்து நபர்கள் போதுமானது.
சாதகங்கள்!
இயற்கை உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப் படும் விளைபொருட்களை அதிக ஆர்வத்துடன் மக்கள் வாங்குகின்றனர். உடல் நிலையை பேணுவது குறித்த விழிப்புணர்வு அதிகளவில் மக்களிடம் ஏற்பட்டு வருவதால், இயற்கையான உரங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களுக்கு அதிகளவு மவுசு ஏற்பட்டிருக்கிறது.
பாதகங்கள்!
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உரத் தயாரிப்பு படுக்கையை மாற்றுவது.
இப்படி பாதகங்களை விட சாதகங்களே அதிகமாக இருப்பதால், புதிதாக பிஸினஸ் செய்ய நினைப்பவர்களும், ஏற்கெனவே வேறு பிஸினஸ் செய்பவர்களும், வீட்டிலிருப்பவர்களும் மண் புழு தயாரிப்பு தொழிலில் அருமையாக இறங்கலாம்
Pure short Nose and long tail Cock
parrot beak and temper,tail male&hens
good quality Chicks Available,,,,,,,,,

Salem arun
PH;9514438445

Delivery available ALL OVER INDIA/ CHARGES APPLY...

Siru Thozhil Munaivor தொழில் Own Small Scale Business

''ஆரம்பத்துல... 'அழகுக்கோழிகளை வளர்க்கலாம்... நாட்டுக்கோழிகளை வளர்க்கலாம்’னு பலரும் ஆலோசனை சொன்னாங்க. நான், நமக்கு பக்கமான ஒட்டன்சத்திரம், அய்யலூர் சந்தைகள்ல எந்தக் கோழிக்கு மார்க்கெட் நல்லாயிருக்குனு பார்த்து, அதைத்தான் வளர்க்கணும்னு முடிவு பண்ணி... சந்தைகளுக்கு அடிக்கடி போயிட்டு வந்தேன். அப்போ, நாட்டுக்கோழிகளுக்கு நல்ல மார்க்கெட் இருந்தாலும், பெருவட்டு சேவல்களையும், கோழிகளையும் எல்லாரும் விரும்பி வாங்கறதைப் பாத்தேன். குறிப்பா, அசில் சேவல்களுக்கு நல்ல கிராக்கி இருந்துச்சு. விலையும் நல்லா கிடைக்கறதைத் தெரிஞ்சுக்கிட்டேன். 
பெரும்பாலும், அசில் சேவல்களைத்தான் சண்டைக்குப் பயன்படுத்துவாங்க. அதனால, இதுக்கு நல்ல தேவை இருக்கு. நான் ரெண்டு ரகங்களையும் கலந்து கோழிகளை உருவாக்குறப்போ... கோழி, சேவல்கள் நல்ல பெருவெட்டா வருது. இப்போ, கையில அசில், சிட்டகாங் ரெண்டு ரகத்துலயும் சேர்த்து 10 சேவல்கள், 100 கோழிகள்,
100 குஞ்சுகள் வெச்சுருக்கேன். நான் உற்பத்தி பண்ணுன குஞ்சுகளை முதல் தடவை விற்பனை செய்து கிடைச்ச வருமானத்துல... பொள்ளாச்சியில இருந்து நூறு கடக்நாத் வகை கோழிக் குஞ்சுகளை வாங்கிட்டு வந்தேன். அதெல்லாம் இப்போ பருவத்துக்கு வர்ற வயசுல இருக்கு. இது, பழங்குடி மக்கள் வளர்க்கற ரக கோழி. இதோட கறி, கருப்பு நிறத்துலதான் இருக்கும். ரொம்ப மருத்துவ குணம் வாய்ந்த கறி. இந்தக் கோழி நல்ல விலைக்குப் போகும்'' என்ற பாலமுருகன், கடக்நாத் கோழிகளைக் காட்டியபடியே தொடர்ந்தார்.
வளர்ப்புக்கு மட்டும் விற்பனை!

''அசில், சிட்டகாங் கோழிகள் ஒரே மாதிரி இருக்கறதால தானாவே சேர்ந்து இனப்பெருக்கம் செஞ்சுக்கும். ஆனா, கடக்நாத் கோழிகள் அந்த இனத்தோட மட்டும்தான் சேரும். அதனால, இனம் கலக்குறதுக்கு வாய்ப்பில்லை. சராசரியா, இப்போ ஒரு நாளைக்கு பத்து முட்டைகள் கிடைச்சுட்டு இருக்கு. அதை இன்குபேட்டர்ல பொரிக்க வெக்கிறேன். ஊளை முட்டைகள் போக, மாசத்துக்கு சராசரியா 200 குஞ்சுகள் உற்பத்தி ஆகுது. நான் குஞ்சுகளா விக்கிறதில்லை. அம்பது, அம்பத்தஞ்சு நாள் வரைக்கும் வளர்த்துத்தான் விக்கிறேன். அதேமாதிரி, கறிக்காகவும் விக்கிறதில்லை. வளர்ப்புக்காக தாய்க்கோழிகளா மட்டும்தான் விக்கிறேன். சேவக்கட்டுக்காக சேவல்களைத் தனியாவும் வாங்கிக்கிறாங்க'' என்ற பாலமுருகன், பராமரிப்பு முறைகளை விளக்கினார்.
''50 அடி நீளம் 10 அடி அகலத்துல கூரைக் கொட்டகை போட்டிருக்கேன். சுத்தி கம்பி வலை இருக்கு. கோழிகளுக்கு எப்பவும் தண்ணி கிடைக்கற மாதிரி நாசில் பைப் வசதி செஞ்சு வெச்சுருக்கேன். ஷெட்டுக்கு மேல பிளாஸ்டிக் பால் கேனை வெச்சு... அதுல குழாய்களை இணைச்சுருக்கேன். இந்த கேனை தினமும் தண்ணி ஊத்தி நிரப்பி வெச்சுடுவோம். தேவைப்படும்போது கோழிகள் குடிச்சுக்கும். தினமும் காலையில தீவனத்தை தொட்டியில நிரப்பி வெச்சுடுவோம். நாட்டுக்கோழிக்குனு பிரத்யேகமா கம்பெனித் தீவனம் கடைகள்ல கிடைக்குது. அதைத்தான் கோழிகளுக்குக் கொடுக்குறோம். தினமும் சேகரமாகற முட்டைகளை எடுத்து பத்திரப்படுத்திடுவோம்.
Pure short Nose and long tail Cock
parrot beak and temper,tail male&hens
good quality Chicks Available,,,,,,,,,

Salem arun
PH;9514438445

Delivery available ALL OVER INDIA/ CHARGES APPLY...

நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள்

நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள்


1.ஆண், பெண் கோழி விகிதம்:
நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகள் பெற நாம் வளர்க்கும் 5 பெட்டைக் கோழிகளுக்கு ஒரு சேவல் என்ற விகிதத்தில் பெட்டை சேவலை இணைத்து வளர்க்க வேண்டும். இவ்வாறு வளர்க்கும்போது சேவல் பெட்டைக் கோழியுடன் இணைந்தவுடன் கருவுறுதல் எளிதில் நடைபெற்று கருக்கூடிய முட்டைகள் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. மாறாக பெட்டை சேவல் கோழிகளின் விகிதம் 10:1 என்று இருந்தால் குஞ்சு பொரிப்புத்திறன் குறையும்.
2.அடைகாத்தலுக்கு பெட்டைக் கோழியினை உட்கார வைக்கும் நேரம்:
பொதுவாக கிராமப்புறங்களில் நாட்டுக்கோழிகள் பகல் முழுவதும் சுதந்திரமாக சுற்றித்திரிந்து இரவில் வீடுகளில் அடைத்து வைத்து வளர்க்கப்பட்டு வருகிறது. எனவே ஒரு பெட்டைக்கோழியை முட்டை அடைகாக்கும் பணியில் தேர்வு செய்து அடைமுட்டை மீது உட்கார வைக்கும்போது அடைக்கோழி 21 நாட்கள் அடைக்காலம் வரை அதிகநேரம், அடிக்கடி கூடையை விட்டு வெளியே எழுந்திருக்காமல் முட்டையோடு உடன் இருப்பது, அதிக குஞ்சுகள் பெறுவதற்கு வழிவகுக்கும். அடைக்கோழியானது அடைக்கு வைக்கப்பட்ட முட்டைகளில் தனக்கு சொந்தமான குஞ்சுகள் வளர்கிறது. அதனை நாம் வளர்க்க வேண்டும் என்ற பாச உணர்வு எழும்போது முட்டையை விட்டு அடிக்கடி வெளியே செல்லாமல் ஒருநாளில் நீண்டநேரம் அடையில் உட்கார வாய்ப்புள்ளது. அந்திசாயும் மாலை வேளையில் ஒரு கோழியை அடைக்கு உட்கார வைக்கும்போது இரவு முழுவதும் ஒரே இடத்தில் இருந்து பழக்கப்பட்டு வளர்ந்த காரணத்தால் கோழி வெளியேறாமல் 12 மணி நேரம் அடை முட்டைகள் மீது ஒரு இரவு முழுவதும் அமரும்போது அக்கோழிக்கு தாய்மை உணர்ச்சி அதிகமாகி முட்டைகளை முறையாக அடைகாக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. எனவே 21 நாட்கள் அடைகாக்கும் காலத்தில் இரவு நேரத்தில் வைக்கப்பட்ட அடைக்கோழிகள் வெளியே அதிகமாக முட்டையை விட்டு எழுந்திருப்பது இல்லை.
மாறாக முதன்முதலில் அடைக்கு வைக்கும்போது காலை நேரத்தில் அடைக்கு உட்காரவைத்தால் தீவனம் எடுக்கும் நோக்கம் அதிகமாகி 21 நாட்கள் அடைக்காலத்தில் இடையிடையே வெளியில் சென்றுவிட்டு மீண்டும் வந்து உட்காரும் நிலை வரும். இவ்வாறு அடைக்கோழி முட்டையை விட்டு அடிக்கடி சென்று வருவதால் குஞ்சு வளர தேவையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் பாதிக்கப் பட்டு குஞ்சு இறப்பு ஏற்பட்டு குறைந்தளவில் மட்டுமே முட்டைகள் பொரிப்பதற்கு காரணமகிவிடுகிறது.

எனவே இயற்கை முறையில் அடைக்கோழி மூலம் குஞ்சு பெறும் போது அடைக்கோழிகளை மாலை அல்லது இரவு நேரங்களில் அடைக்கு உட்கார பயன்படுத்தும்போது பகலில் உட்கார வைக்கும் கோழிகளிடமிருந்து கிடைக்கும் குஞ்சுகளைவிட இரவில் கோழியை உட்காரவைத்து பெறப்படும் குஞ்சுகள் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே இயற்கை முறை அடைகாத்தலில் அடைக்கோழிகளை அடைகாத்தலுக்கு பயன்படுத்த தேர்ந்தெடுக்கும் காலமும் முட்டை குஞ்சு பொரிப்புத்திறன் அதிகரிக்க காரணமாக உள்ளது.
3.கருக்கூடிய முட்டையைக் கண்டறிதல்:
நாட்டுக்கோழிகளில் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் அதிக எண்ணிக்கையில் பெற 21 நாட்கள் ஆகிறது. நாம் வைத்துள்ள முட்டைகளில் கருக்கூடாமல் கூமுட்டைகளாக எத்தனை உள்ளன என்பதை முட்டை அடை வைத்த 7 நாட்களில் கருமுட்டை பரிசோதனை செய்து தெரிந்துகொள்ளலாம்.
இதற்கு தேவையானவை ஒரு டார்ச்லைட் அல்லது மின்சார பல்பு, ஒரு அட்டை. கருமுட்டையைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு இருட்டு அறையில் ஒரு அட்டையில் முட்டை போகும் அளவிற்கு ஓட்டை போட்டு முட்டையின் அகலமான பகுதி மேலாகவும் கூம்பு வடிவமான பகுதி கீழாக வரும்படி நெட்டு வசமாக வைத்து கீழ்புறத்தில் இருந்து விளக்கு வெளிச்சம் கொடுக்கும்போது முட்டையில் கருக்கூடியிருந்தால் முட்டையின் மேற்பகுதியில் வளர்ச்சிஅடைந்த கருவின் தலை கரும்புள்ளியாகவும், ரத்தநாளங்கள் சிவப்பாகவும் தெரியும். கருக்கூடாத முட்டையில் இவ்வாறு எந்தவிதமான புள்ளிகளோ, ரத்த நாளங்களோ இல்லாமல் வெறுமனே இருக்கும். எனவே அடைக்கு வைத்த 7வது நாளில் கருக்கூடிய முட்டையை மட்டும் கண்டறிந்து மீதமுள்ள கருக்கூடாத கூமுட்டையை அடையிலிருந்து எடுத்துவிடலாம்.
கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பவர்கள் மேற்கூறிய மேலாண்மை முறைகளைக் கவனத்தில் கொண்டு பெட்டை அடைக்கோழிகள் மூலம் இயற்கை முறையில் அடைவைத்து அதிக குஞ்சுகளை பெற்று பலன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி///////////////////////////////////////////////////////////////
Pure short Nose and long tail Cock
parrot beak and temper,tail male&hens
good quality Chicks Available,,,,,,,,,

Salem arun
PH;9514438445

Delivery available ALL OVER INDIA/ CHARGES APPLY...